நடிகர் மோகன்லால் எம்புரான் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பான் இந்தியா திரைப்படமாக வருகிற மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுதானா?
கேரளத்தில் மட்டுமல்லாது இந்தியளவிலும் இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பதிவு செய்யலாம் எனத் தெரிகிறது. அந்த அளவிற்கு படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய மோகன்லால், “லூசிஃபர் படத்தின் இறுதியில் ஸ்டீஃபன் நெடுப்பள்ளியான நான் குரேஷி ஆபிரஹாமாக அறிமுகமானேன். எம்புரானில் ஆபிரஹாம் யார்? என விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. எம்புரான் திரைப்படமே என் திரைவாழ்வில் மிகப்பெரிய படம் என நினைக்கிறேன். இப்படத்தில் மூன்றாம் பாகத்திற்கான தொடர்ச்சியை வைத்திருக்கிறோம். உங்களைப்போல நானும் மார்ச். 27 ஆம் தேதிக்குக் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்
லோகா - 2 படப்பிடிப்பு எப்போது? கல்யாணி பதில்!
தலைவர் - 173... வாக்கு கொடுத்த சிபி சக்ரவர்த்தி!
வித் லவ் ஹிட் அடிக்கும்: மணிகண்டன்
வீடியோக்கள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

ஹேப்பி ராஜ் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

