கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார்?

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் - படம் | எக்ஸ்

Published On :

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பணப்பெட்டியை எடுக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் வெளியேறும் கனவுடன் இருந்த ஜெஃப்ரி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள 8 போட்டியாளர்களில் இறுதிவரை சென்று வெற்றி வாய்ப்பை நழுவவிடுவதை விட பணப்பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. முத்துக்குமரன், தீபக், வி.ஜே. விஷால், ரயான், அருண் பிரசாத், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி ஆகிய 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

முன்னாள் போட்டியாளர்கள்

எஞ்சியுள்ளவர்களுக்கு போட்டியாக ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் விளையாடி வெளியேறிய பழைய போட்டியாளர்கள் 8 பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் மோத உள்ளனர். இவர்களில் இருவர் பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களில் இருவரை மாற்றம் செய்யவுள்ளனர்.

இதனால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வார இறுதியில் பிக் பாஸ் சார்பில் பணப்பெட்டி வழங்கப்படவுள்ளது. பிக் பாஸ் போட்டியில் நீடிக்க விரும்பாத போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம்.

ரயான் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வானதால், எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுக்கவுள்ளனர்.

உள்ளே வந்த முன்னாள் போட்டியாளர்கள் கூறிய தகவல்களில் வி.ஜே. விஷால் தன் மீது நம்பிக்கை இழந்துள்ளதால், அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று அருண் பிரசாத் மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோருக்கும் வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால், பணப்பெட்டியுடன் அவர்கள் வெளியேறுவது சிறந்த ஆட்டமாக அமையும் என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.