சந்தீப் ரெட்டி வங்கா - பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா.
அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தாய்லாந்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ஷ்ருதி ஹாசன்!
இந்த நிலையில், ஸ்பிரிட் படத்தின் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.