12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜப்பானில் வெளியான மாவீரன் திரைப்படம்! எஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஜப்பானில் வெளியாவது குறித்து...

The poster for Maveeran released in Japanese.

ஜப்பானிய மொழியில் வெளியான மாவீரன் போஸ்டர். - படம்: ஷாந்தி டாக்கீஸ்.

Published On :

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஜப்பானில் வெளியாகியிருக்கிறது.

மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் கடந்த 2023-இல் வெளியானது.

விமர்சன ரீதியாகவும் கமர்ஷியலாகவும் மாபெறும் வெற்றிப் பெற்ற படமாக மாவீரன் மாறியது.

இந்தப் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பார். மிஷ்கின் வில்லனாக அசத்தியிருப்பார்.

ஷாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்தப்படம் தற்போது ஜப்பானில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷாந்தி டாக்கீஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நேற்றிரவு, “மாவீரன் நாளை முதல் ஜப்பான் மக்களின் மனதை வெல்ல தயாரானான்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இன்றுமுதல் ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இதனால், சிவகார்த்திகேயன் (எஸ்கே) ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளார்கள்.

Summary

The film Maveeran, starring actor Sivakarthikeyan, has been released in Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.