தி கேர்ள்பிரண்ட் முதல் பாடல் ரிலீஸ் தேதி!
நடிகை ரஷ்மிகாவின் தி கேர்ள்பிரண்ட் பட பாடல் குறித்து...

தி கேர்ள்பிரண்ட் பட போஸ்டர். - படம்: எக்ஸ் / கீதா ஆர்ட்ஸ்.
ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள தி கேர்ள்பிரண்ட் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
நடிகை ரஷ்மிகா மந்தனா அனிமல், புஷ்பா திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.
தெலுங்குப் படங்களைத் தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்மிகா கதை நாயகியாக நடித்துவந்த, ‘தி கேர்ள்ஃபிரண்ட் (the girlfriend) படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது.
கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நதிவே (நிலவே) எனும் முதல்பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
A melody that will echo through your soul â¨#TheGirlfriend first single - #Nadhive | #Nadhiye | #HuiRe | #Nilave | #Swarave out on July 16th â¤ï¸
— Geetha Arts (@GeethaArts) July 12, 2025
A @HeshamAWMusic musical delight â¨@iamRashmika @Dheekshiths @23_rahulr @GeethaArts #AlluAravind #VidyaKoppineedi @Vishwakiranloka⦠pic.twitter.com/DEpKPYpd4E
Summary
The release date of the first song of the film The Girlfriend starring Rashmika Mandanna has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






