நடிகர் வடிவேலு மாரீசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான திரைப்படம் மாரீசன். ஞாபக மறதி நோயாளியான வடிவேலு, திருடனான ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான பயணமாக கதை உருவாகியிருக்கிறது.
இப்படம் நாளை (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு, “மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குநரிடம், கதைக்கும் தலைப்புக்குமான காரணம் என்ன எனக் கேட்டபோது, ராமாயணத்துக்கும் இப்படத்தின் கதைக்குமான தொடர்பைக் குறித்துச் சொன்னது நன்றாக இருந்தது.
மாமன்னனுக்குப் பிறகு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததுடன் அவர் என்னுடைய ரசிகர் என்பது கூடுதல் மனநிறைவைக் கொடுக்கிறது. மாரீசன் திரைப்படம் சமூக விழிப்புணர்வைப் பேசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கான படம் என்பதைத் தாண்டி அனைவரும் மாரீசனை ஏற்றுக்கொள்வார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டுத் தேதி!
actor vadivelu spokes about maareesan movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பிலிம் கேமராவில் எடுக்கப்படும் ரஜினி - கமல் திரைப்படம்?
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் ஃபகத் ஃபாசில்!

ஆவேஷம் - 2! உறுதி செய்த ஃபஹத் ஃபாசில்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

