ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாரீசன் விழிப்புணர்வான படம்: வடிவேலு

மாரீசன் திரைப்படம் குறித்து நடிகர் வடிவேலு...

News image
நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில்
Updated On :24 ஜூலை 2025, 10:46 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் வடிவேலு மாரீசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான திரைப்படம் மாரீசன். ஞாபக மறதி நோயாளியான வடிவேலு, திருடனான ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான பயணமாக கதை உருவாகியிருக்கிறது.

இப்படம் நாளை (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் வடிவேலு, “மாரீசன் என்கிற பெயரே வித்தியாசமாக இருந்தது. இயக்குநரிடம், கதைக்கும் தலைப்புக்குமான காரணம் என்ன எனக் கேட்டபோது, ராமாயணத்துக்கும் இப்படத்தின் கதைக்குமான தொடர்பைக் குறித்துச் சொன்னது நன்றாக இருந்தது.

மாமன்னனுக்குப் பிறகு ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்ததுடன் அவர் என்னுடைய ரசிகர் என்பது கூடுதல் மனநிறைவைக் கொடுக்கிறது. மாரீசன் திரைப்படம் சமூக விழிப்புணர்வைப் பேசுகிறது. இன்றைய கால இளைஞர்களுக்கான படம் என்பதைத் தாண்டி அனைவரும் மாரீசனை ஏற்றுக்கொள்வார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

actor vadivelu spokes about maareesan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.