குடியரசுத் தலைவருடன் நடிகர் ஆமிர் கான் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரபல நடிகர் ஆமிர் கான் சந்தித்துள்ளதைப் பற்றி...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன், நடிகர் ஆமிர் கான்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன், நடிகர் ஆமிர் கான்எக்ஸ்
Published on
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சந்தித்து பேசியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான ஆமிர் கானின் புதிய திரைப்படமான, ”சித்தாரே ஜமீன் பர்” திரையரங்குகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 24) சந்தித்ததாக, எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சந்திப்பில் அவர்கள் பேசிய உரையாடல்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இன்று (ஜூன் 24) குடியரசுத் தலைவரை, சிக்கிம் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூர் மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் சிந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மம்மூட்டி - மோகன்லால் படத்தின் பெயர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com