
நடிகர் சூர்யா மறைந்த அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
தற்போது சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தன் 46-வது படத்தில் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வெங்கட் அட்லூரி, “மறைந்த காங்கிரஸ் அரசியல்வாதி சஞ்சய் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சூர்யா - 46 திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தோம். ஆனால், சஞ்சய் காந்தியின் பயோபிக் உரிமத்தைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
சூர்யாவும் சூரரைப் போற்று, ஜெய்பீம் என இரு உண்மைக் கதைகளில் நடித்துவிட்டார். அதனால், வேறு ஒரு கதையையே தற்போது எடுத்து வருகிறோம். இது, குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா, சஞ்சய் காந்தியின் பயோபிக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்
suriya plans to act sanjay gandhi biopic
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.