இளையராஜா பயோபிக் குறித்து நடிகர் தனுஷ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
தொடர்ந்து, இளையராஜா மற்றும் அருண் மாதேஸ்வரன் அடிக்கடி சந்தித்து படத்தின் உருவாக்கம் குறித்து ஆலோசனை செய்து வந்தனர். இதற்கான, மாதிரி செட் அமைப்பைப் பார்த்த இளையராஜா தன் கருத்துகளையும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 'இந்தி வாழ்க’ இலங்கையில் பராசக்தி படப்பிடிப்பு!
ஆனால், கடந்த சில மாதங்களாகவே இப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், விசிக எம்பி ரவிக்குமார் தில்லி விமான நிலையத்தில் நடிகர் தனுஷை சந்தித்தது குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இளையராஜா படம் என்ன ஆனது?’ எனக் கேட்டதற்கு, ‘அப்படம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என தனுஷ் பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இளையராஜா படம் கைவிடப்படவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

தனுஷ் - 55 வெளியீடு எப்போது?
சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல்!
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


