நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இணையத்தைக் கலக்கும் தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்!

வைரலான தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்...

News image
Updated On :18 மார்ச் 2025, 5:10 pm IST

மகேந்திர சிங் தோனி மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து நடித்த விளம்பரம் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 22 முதல் துவங்கவுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சியில் தோனி ஈடுபட்டுள்ளார். இப்பயிற்சிக்கு முன் சில விளம்பரங்களில் நடித்து கொடுத்திருக்கிறார்.

அப்படி, பிரபல சைக்கிள் நிறுவனம் ஒன்று தங்களின் புதிய எலக்ட்ரிக் சைக்கிளுக்கான விளம்பரத்தில் நடிகர் தோனியை நடிக்க வைத்திருக்கின்றனர்.

இந்த விளம்பரம் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அனிமல் பட காட்சிகளின் சாயலைக் கொண்டுள்ளதுடன் இதில் சந்தீப் ரெட்டியும் தோனியுடன் இணைந்து நடித்துள்ளார்.

அனிமல் படத்தை மறுஉருவாக்கம் செய்ததுபோன்ற காட்சிகளும் கிளைமேக்ஸும் சைக்கிள் விளம்பரத்திற்காக ரசிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விளம்பர விடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

அனிமல் ஃபார் ரீசன் (animal for reason) என சந்தீப் ரெட்டி வங்கா தன் எக்ஸ் பக்கத்தில் விடியோவை பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.