எம்புரான் திரைப்படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இதனால், முன்பதிவிலேயே பல சாதனைகளை படைத்த எம்புரான் முதல்நாளில் உலகளவில் ரூ.50 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, 48 மணி நேரத்துக்குள்ளாகவே ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், விமர்சன ரீதியாக இப்படம் கலவையான வரவேற்பையே பெற்றுள்ளது. இதனால், எம்புரானில் இடம்பெற்ற காட்சிகளில் 17 இடங்களில் கட் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி, திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் எம்புரானின் புதிய வடிவம் திரையிடப்பட உள்ளதாகத் தகவல்.
இதையும் படிக்க: நாயகனாகும் விஜே சித்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









