இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

‘மெட்ராஸ் மேட்னி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

’மெட்ராஸ் மேட்னி’ படத்தில் நடிகர்கள் காளி வெங்கட் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

News image

dinamani

Updated On :22 மே 2025, 8:43 pm IST

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “மெட்ராஸ் மேட்னி”.

இந்தப் படத்தின் கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியன், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் மேட்னி போஸ்டர்

மெட்ராஸ் மேட்னி போஸ்டர்

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரில் மே 23 ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களினால் அந்த வெளியீடானது தள்ளிவைக்கப்பட்டது.

அதன் பின்னர், முதல் பார்வை போஸ்டரில், இந்தப் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் ஜூன் 6 ஆம் தேதியன்று ‘மெட்ராஸ் மேட்னி’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இசையமைப்பாளர் கே.சி. பாலசரங்கன் இசையமைக்கும் இந்தப் புதிய படத்தின் முதல் பாடலான ’என்னடா பொழப்பு இது’ எனும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.