சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் புதிய படம்!

நடிகர் வடிவேலுவுடனான புகைப்படத்தை வெளியிட்ட பார்த்திபன்...

Published On :

நடிகர்கள் பார்த்திபன், வடிவேலு புதிய படத்தில் இணைய உள்ளனர்.

மாமன்னன் படத்திற்குப் பின் வடிவேலுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அண்மையில், கேங்கர்ஸ் படத்திலும் வடிவேலு ரசிக்கும்படியான நகைச்சுவைகளைச் செய்திருந்தார்.

அடுத்ததாக, ஃபஹத் ஃபாசிலுடன் அவர் நடித்த மாரீசன் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், வடிவேலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த நடிகர் பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர் . சந்தித்தோம். விரைவில் படம் வெளியாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் - வடிவேலு இணைந்து நடித்த பாரதி கண்ணம்மா, காதல் கிறுக்கன், குண்டக்க மண்டக்க, வெற்றிக்கொடிகட்டு ஆகிய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.