பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!

சாருகேசி படத்தில் நடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன்.

charukesi

சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன். - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :

பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

சத்யா, பாட்ஷா, அண்ணாமலை, ஆளவந்தான் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் இயக்கும் புதிய திரைப்படம் சாருகேசி.

அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். வசனம், பாடல்களை பா. விஜய் எழுதியுள்ளார். தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒய்.ஜி. மகேந்திரன் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘சாருகேசி’ என்ற நாடகக் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கோடை விடுமுறையையொட்டி மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சாருகேசி படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று(ஏப். 14) நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

சாருகேசி படத்தின் டீசரும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

Ramya Pandian has starred in the film Charukesi, directed by Suresh Krishna the director of the movie Baashha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.