முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் நயன்தாரா?

நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா....

News image

நடிகர்கள் கார்த்தி, நயன்தாரா

Updated On :4 ஆகஸ்ட் 2026, 4:30 pm IST

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக மோகன் ராஜா அறிவித்துள்ளார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் கதையை மோகன் ராஜாவே எழுதியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள சர்தார் - 2 திரைப்படம் செப். 10 ஆம் தேதி வெளியாகிறது. இந்த வெளியீட்டைத் தொடர்ந்து மோகன் ராஜா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மோரா திரைப்படத்தில் கார்த்தி, நயன்தாரா

காஷ்மோரா திரைப்படத்தில் கார்த்தி, நயன்தாரா

இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடிகர் கார்த்தியின் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் காஷ்மோரா திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பின், இப்படத்தில் மீண்டும் இவர்கள் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா - கவின் நடிப்பில் உருவான ஹாய் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதுபோக, நடிகர் யஷ் உடன் டாக்ஸிக், சல்மான் கானுடன் புதிய படம் என பிரம்மாண்ட பட்ஜெட் படங்களிலும் நயன்தாரா இணைந்துள்ளார்.

Reports indicate that actress Nayanthara will star opposite actor Karthi in his new film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.