சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் நடிகை த்ரிஷா?

த்ரிஷா நடிப்பதிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது...

News image

நடிகை த்ரிஷா

Updated On :16 ஆகஸ்ட் 2026, 2:42 pm IST

நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடெண்டிட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து, இந்தாண்டு நடிகர் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கர்ஜணை மற்றும் சதுரங்க வேட்டை - 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

இந்தாண்டு இறுதியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த ராம் திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, த்ரிஷா நடித்த தெலுங்கு படமான விஸ்வம்பரா படமும் வெளியாகக் காத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டிற்கு சில திரைப்படங்களில் ஒப்பந்தமான த்ரிஷா, ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாவதைத் தவிர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு ஒப்புக்கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வெடுக்கத் த்ரிஷா திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. மேலும், த்ரிஷா தயாரிப்புத் துறையில் இறங்கலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.

Reports indicate that actress Trisha plans to quit the film industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.