FOLLOW US

ON GOOGLE DISCOVER

மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

ஓணம் வெளியீட்டில் பிருத்விராஜை மூன்றாவது முறையாக வென்ற நிவின் பாலி!

நடிகர் நிவின் பாலியின் ஓணம் வெளியீட்டுத் திரைப்படம் ஹிட் அடித்துள்ளது...

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:48 pm IST

நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் வெற்றியை நோக்கி சென்றுள்ளது.

இந்தாண்டு ஓணத்திற்கு நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான கலிஃபா, நிவின் பாலி நடித்த பெத்லகேம் குடும்ப யூனிட் ஆகிய படங்கள் வெளியாகின.

இதில், பிருத்விராஜின் கலிஃபா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனால், வணிக ரீதியாக ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளது. மேலும், நடிகர் நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால், இந்த ஓணம் வெளியீட்டில் நிவின் பாலியே முன்னணியில் உள்ளார்.

முன்னதாக, 2017 ஆம் ஆண்டு ஓணத்தின் போது, நடிகர் பிருத்விராஜின் ஆடம் ஜோனும் நிவின் பாலியின் நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள திரைப்படங்கள் வெளியாகின. அதில், நிவின் பாலியின் படமே வெற்றிப்படமானது.

தொடர்ந்து, 2019-ல் பிருத்விராஜ் நடித்த ப்ரதர்ஸ் டேவும் நிவின் பாலி நடித்த லவ் ஆக்‌ஷன் டிராமா ஆகிய திரைப்படங்களும் வெளியாகின. இதிலும், நிவின் பாலியின் படமே பிளாக்பஸ்டர் ஆக, பிருத்விராஜ் படம் தோல்விப்படமானது. இந்த வகையில், நிவின் பாலியே தொடர்ந்து ஓணம் வெற்றியைக் கொடுத்துள்ளார்.

Nivin Pauly's 'Bethlehem kudumba unit' is heading towards success.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.