45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி...
ரஜினி, தூய்மைப் பணியாளார் பத்மா
ரஜினி, தூய்மைப் பணியாளார் பத்மா
Updated on
1 min read

தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி பரிசளித்து பாராட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகா் முப்பாத்தம்மன் கோவில் தெரு, வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பையில் தங்க நகைகள் இருப்பதைக் கண்ட தூய்மைப் பணியாளர் பத்மா, தனது மேலதிகாரிகளின் உதவியுடன் பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் அந்த நகைகளை ஒப்படைத்தாா்.

காவல் துறையினா் அந்தப் பையை சோதனை செய்தபோது ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், நங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா், பாண்டிபஜாா் காவல் நிலையத்தில் சுமாா் 45 பவுன் நகைகளை தொலைத்துவிட்டதாக ஏற்கெனவே புகாா் அளித்திருந்தது தெரிய வந்து அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இதனால், சாலையில் கிடந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் பத்மாவின் நோ்மையைப் பலரும் பாராட்டினர். முக்கியமாக, தமிழக முதல்வர் நேரில் அழைத்து சால்வை அணிவித்து ரூ. 1 லட்சத்தைப் பரிசாக வழங்கினார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து, தங்கச் சங்கிலியைப் பரிசளித்து அவரது நேர்மையைப் பாராட்டியுள்ளார். ரஜினியின் இச்செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரஜினி, தூய்மைப் பணியாளார் பத்மா
கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!
Summary

actor rajinikanth gift a gold chain to Sanitation worker padma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com