காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அதிகார துஷ்பிரயோகம்... ஜன நாயகன் பட பிரச்னையில் கொந்தளித்த இயக்குநர்!

ஜன நாயகன் திரைப்படம் தாமதமாவது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியதாவது...

News image

ஜன நாயகன் போஸ்டர், அஜய் ஞானமுத்து. - படங்கள்: எக்ஸ் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ், அஜய் ஞானமுத்து

Updated On :7 ஜனவரி 2026, 9:42 pm IST

ஜன நாயகன் திரைப்படம் தாமதமாவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பதிவிட்டது வைரலாகி வருகிறது.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் செய்வது குறித்து அவரது கருத்து விஜய் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததால், இந்த விவகாரம் குறித்து ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியதாவது:

இது முற்றிலும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். எந்த ஒரு திரைப்படமும் ஒரு மனிதரால் உருவானதல்ல; அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் உழைப்பு இருக்கிறது.

திரைக்குச் செல்ல பணமும் இதில் ஈடுபட்டுள்ளது. படக்குழுவுக்கு எனது ஆதரவு. இது தளபதியின் படம், கடைசி படம் வேறு. எப்போது வெளியானாலும் இந்தப் படத்தை இதுவரை இல்லாத அளவுக்குக் கொண்டாடுவோம்.

தலைவன் படம் எப்போ தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ அப்போ தியேட்டர் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வெளிநாட்டிலும் இந்தப் படம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Summary

Absolute misuse of power says director Ajay Gnanamuthu about Jana Nayagan cbfc issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.