நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வரும் ஜன.9 வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகும் “ஜன நாயகன்” திரைப்படம் வரும் ஜன.9 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அவர் நாயகனாக நடிக்கும் கடைசி திரைப்படம் எனக் கருதப்படும் இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், “ஜன நாயகன்” படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததால், இந்த விவகாரம் குறித்து ஜன.9 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, மலேசியா உள்ளிட்ட 39-க்கும் அதிகமான நாடுகளில் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, விநியோகிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.