

விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்கள் நாளை முதல் மறுவெளியீட்டுக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களை நாளைமுதல் (ஜன. 9) மறுவெளியீடு செய்யவிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளனர்.
ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் மறுவெளியீட்டுக்கு வரவுள்ளன.
விஜய் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் கூட்டணியில் உருவான இந்த இரு படங்களின் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜன நாயகன் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், மாஸ்டரும் லியோவும் திரையிடப்படுவதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.