பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை!

சிரஞ்சீவி படத்தினால் பாதிப்பு? பிரபாஸ் பட வசூல் எவ்வளவு?

நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் வசூல் குறித்து...

The Raja Saab film poster

தி ராஜா சாப் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / தி ராஜா சாப் மூவி.

Published On :

நடிகர் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் முதல் வாரத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியின் மன ஷங்கர வர பிரசாத் காரு படத்தினால் இந்தப் பட வசூல் பாதிப்படைந்ததாகக் கூறப்படுகிறது.

பீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் நகைச்சுவை, ஆக்‌ஷன், ஹாரர் கலந்த படமாக தி ராஜா சாப் கடந்த ஜன. 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஹாரர் ஃபேண்டசி காட்சிகளில் இடம்பெற்ற விஎஃப்எக்ஸ் பணிகள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

உலகம் முழுவதும் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளில் ரூ.112 கோடி வசூலிக்க, தற்போது முதல் வாரத்தில் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சிரஞ்சீவியின் மன ஷங்கர வர பிரசாத் காரு 4 நாள்களில் ரூ.190 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படத்திற்கான வரவேற்பினால் பிரபாஸ் பட வசூல் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

Summary

The first-week box office collection details of actor Prabhas's film 'The Raja Saab' have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.