தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஏமாற்றத்தைக் கொடுத்த ஜன நாயகன் வழக்கு தீர்ப்பு!

ஜன நாயகன் வழக்கு தீர்ப்பு தொடர்பாக....

நடிகர் விஜய்

Published On :

ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை வாரியம் தரப்பிலிருந்து மறு ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை நாடி தணிக்கைச் சான்றிதழை உடனடியாக பெற்றுத்தர வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாள்களாக நடந்து வந்தது. இதில், தணிக்கை வாரியம் மற்றும் ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியது.

அதில், மத ரீதியான கருத்துகள் படத்தில் இடம்பெறுவதை ஏற்க முடியாது என்றும் தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்று, தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் தீர்ப்பை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.

மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் அளித்து, மீண்டும் விசாரணை நடத்த தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பிப்ரவரி வெளியீடாக ஜன நாயகன் திரைக்கு வராது என்றே தெரிகிறது.

ஒருவேளை, பிப்ரவரியில் தணிக்கை பிரச்னைகள் முடிந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருமானால், ஏதேனும் அரசியல் கட்சி, வேட்பாளர் அல்லது சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் அல்லது பாதிக்கும் உள்ளடக்கத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

ஒரு திரைப்படம் பிரசார நோக்கில் வாக்காளர்களை சென்றடையக் கூடும் என்று தேர்தல் ஆணையம் கருதினால், அந்த படத்தின் திரையிடல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்துவதற்கு அதிகாரம் உள்ளது.

இதனால், ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் கடும் சிக்கலைச் சந்தித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.