சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஜன நாயகன் கசிவிலிருந்து மீண்டு வரவில்லை: எடிட்டர் பிரதீப் ராகவ்

ஜன நாயகன திரைப்படம் குறித்து அப்படத்தின் எடிட்டர் பேசியுள்ளார்...

News image

ஜன நாயகன் டிரைலர் காட்சி. - படம்: யூடியூப் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.

Updated On :30 ஜூலை 2026, 12:52 pm IST

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் குறித்து அதன் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ் பேசியுள்ளார்.

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டன.

இப்படம் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் அதிகமாகவும் தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான திரையரங்குகளில் இந்த வார இறுதிவரை திரையிடப்படும் என்பதால் கூடுதல் வசூலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இப்படத்தின் எடிட்டர் பிரதீப் ஈ ராகவ் , “ஜன நாயகன் இணையத்தில் கசிந்த சம்பவத்திலிருந்து இன்னும் நான் மீண்டு வரவில்லை. போர் எறும்புகளாக இருந்தாலும் அவை ஒரு விலங்கையே கொல்லக்கூடியவை. இந்த சம்பவத்தை இப்படித்தான் பார்க்கிறேன். இணையத்தில் கசிய விட்டவர்கள் இப்போது சிறையில் இருக்கிறார்கள். அதேநேரம், இப்படத்தைப் பார்த்த பலரை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. அவர்களுடையதாக இருந்தால் அதனைச் செய்திருக்க மாட்டார்கள். பணத்தைவிட 1000 பேரின் உழைப்பு அதில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்,

ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பும் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

Editor Pradeep E. Raghav has spoken about the film Jana nayagan, starring Vijay.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.