மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மஞ்சணத்தியில் நாயகிகளாக பிரியங்கா மோகன், கயாடு லோஹர்!

நடிகை பிரியங்கா மோகன் மஞ்சணத்தி படத்தில் இணைந்துள்ளார்...

Priyanka Mohan, kayadu lohar

பிரியங்கா மோகன், கயாடு லோஹர்

Published On :

நடிகைகள் பிரியங்கா மோகன், கயாடு லோஹர் ஆகியோர் மஞ்சணத்தி திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் மஞ்சணத்தி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். மாரியின் முந்தைய படங்களைப் போல இதுவும் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி - திருநெல்வேலி பகுதி கதையாக உருவாகிறது.

இதில், நடிகர்கள் கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் இணைந்ததை, இவர்களே தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தெரியப்படுத்தியுள்ளனர்.

நடிகை பிரியங்கா மோகன் மேட் இன் கொரியா படத்தைத் தொடர்ந்து அரசனில் நடித்து வருகிறார். அதேபோல், கயாடு லோஹர் டிராகன் படத்திற்குப் பின் மலையாளத்தில் பள்ளிச்சட்டம்பி படத்தில் நடித்தார். அது பெரிதாகக் கவனிக்கப்படவில்லை. இவர் நடித்து முடித்துள்ள இதயம் முரளி விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actresses Priyanka Mohan and kayadu lohar have joined the film Manjanathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.