மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா, “எஸ்.பி.பி போல யாருமில்லை” எனக் கூறியுள்ளார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜாவும் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் பாடலின் காப்புரிமை ரீதியாக சிறு விரிசல் ஏற்பட்டு பின்னர் நீங்கியது.
மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பிறந்த நாளான இன்று (ஜூன் 4) இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓர் இசையமைப்பாளரின் தொலைநோக்குப் பார்வையை எஸ்.பி.பி-யை விட வேகமாகப் புரிந்துகொண்டவரும், ஒரு பாடலில் அவரைவிட அதிக கவனம் செலுத்தியவரும் வேறு யாருமில்லை. அவரது வாழ்க்கை, நட்பு மற்றும் 50,000 பாடல்கள் என்ற இணையற்ற சாதனையைக் கொண்டாடுகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எஸ்.பி.பி. எனக் கூறியுள்ளார்.
இளையராஜா தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி படத்திற்காக இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு இசையமைத்து முடித்துள்ளார்.
Summary
Unmatched achievement of 50,000 songs Happy Birthday, SPB says Ilayarajaa
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நிலாப் பாடல்களால் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் பாடும் நிலா 'பாலு'!

80களில் இசையுலகை ஆட்சி செய்த இளையராஜா!

இளையராஜா இசைக்கு உயிர் கொடுத்த எஸ்பிபி குரல்!
உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு! விஜய் படத்துடன் பாடலைப் பகிர்ந்த இளையராஜா!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



