நடிகை சமந்தா தன்னை வெறுப்பவர்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
நடிகை சமந்தா மா இண்டி பங்காரம் என்கிற திரைப்படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். இப்படம் ஆக்சன் கலந்த குடும்ப உணர்வுகளைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இது வருகிற ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ரசிகர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லும் விதமாக சமந்தா இன்ஸ்டாவில் அழைப்பு விடுத்திருந்தார்.
அதில், பேசும்போது, “மா இண்டி பங்காரம் திட்டமிட்ட தேதியில் வெளியாகும். ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. இப்படத்தைக் குடும்பத்துடன் காணும் வகையில் எடுத்திருக்கிறோம். கண்டிப்பாக, உங்களுக்குப் பிடிக்கும்” என்றார். மேலும், ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு சமந்தா, “எந்த வெறுப்பாளர்கள்... என்னை வெறுப்பவர்கள் இருக்கிறார்களா?” எனப் பதிலளித்துள்ளார்.
Actress Samantha has responded to a question about her detractors.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









