மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

நடிகை சினேகா முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு கூறியிருப்பதாவது...

News image

முதல்வர் விஜய்யுடன் சினேகா, அவரது கணவர். - படம்: இன்ஸ்டா / சினேகா.

Updated On :9 ஜூன் 2026, 8:34 pm IST

நடிகை சினேகா முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு, “சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும்” எனக் கூறியுள்ளார்.

நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக முன்னேறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் இன்று தொடக்கி வைத்தார்.

சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை சினேகா தனது குடும்பத்தினர் இன்று விஜய்யை சந்தித்தார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விஜய் சாருடன் இரண்டு படங்கள் பணியாற்றியிருக்கிறேன். இன்று தமிழகத்தின் முதல்வராக அவரைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும்.

இந்தப் பயணம், வளர்ச்சி, அவர் பெற்றுள்ள மரியாதை எல்லாம் மிகவும் உத்வேகம் அளிக்கிறது. இருந்தும், அவர் தற்போதும் கருணையுடன், மிகவும் எளிமையான எனக்குத் தெரிந்த அதே மனிதராகவே இருக்கிறார். அவருக்குக் கூடுதல் பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

நடிகை சினேகா விஜய்யுடன் வசீகரா, கோட் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். தற்போது, சுயமாக தொழில் செய்துவருகிறார்.

Summary

Some moments leave you speechless says actres sneha after meeting Cm Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.