நடிகை சினேகா முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு, “சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும்” எனக் கூறியுள்ளார்.
நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக முன்னேறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் இன்று தொடக்கி வைத்தார்.
சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை சினேகா தனது குடும்பத்தினர் இன்று விஜய்யை சந்தித்தார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
விஜய் சாருடன் இரண்டு படங்கள் பணியாற்றியிருக்கிறேன். இன்று தமிழகத்தின் முதல்வராக அவரைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும்.
இந்தப் பயணம், வளர்ச்சி, அவர் பெற்றுள்ள மரியாதை எல்லாம் மிகவும் உத்வேகம் அளிக்கிறது. இருந்தும், அவர் தற்போதும் கருணையுடன், மிகவும் எளிமையான எனக்குத் தெரிந்த அதே மனிதராகவே இருக்கிறார். அவருக்குக் கூடுதல் பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
நடிகை சினேகா விஜய்யுடன் வசீகரா, கோட் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். தற்போது, சுயமாக தொழில் செய்துவருகிறார்.
Summary
Some moments leave you speechless says actres sneha after meeting Cm Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாற்காலியின் 2 கால்கள் மட்டுமே தவெகவுடையது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

முதல்வர் விஜய்யை சந்தித்த துரை வைகோ!

தமிழகத்தில் நல்ல மாற்றங்கள் வரப்போகிறது: முதல்வரைச் சந்தித்த நடிகை குஷ்பு!

சீரடியில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த நடிகை கனிகா!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


