இளையராஜாவை காயப்படுத்தும் எண்ணமில்லை என்று வருத்தம் தெரிவித்து, கருப்பு படக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
பணத்திற்காக உண்மைக்கு எதிராக வாதாடும் வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடுவது போன்ற காட்சியில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, இளையராஜாவின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலைப் பயன்படுத்தியிருந்தார்.
அந்தப் பாடல் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூக மக்களின் உரிமைக்கான பாடலாக இருக்கிறது. அப்படியான பாடலைத் தேவையற்ற இடத்தில் பயன்படுத்தியதுடன் இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தைக் கிண்டலடித்து அவமரியாதை செய்துள்ளதாக ஆர்ஜே பாலாஜியைப் பலரும் விமர்சித்து வந்தனர்.
இது குறித்து, கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவித்திருப்பதாவது:
”இசைஞானி இளையராஜாவுக்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.
50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.
உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The crew of the film Karuppu has issued a statement expressing regret, clarifying that they had no intention of hurting Ilaiyaraaja.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








