இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து புதிய திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நாயகியாக மமிதா பைஜூ நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. டிராகன் திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்ட அஷ்வத், அப்படத்திலேயே சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தற்போது, கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் பிரதீப் தயாரிக்கும் படத்தில் இணைந்துள்ளாராம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
It is reported that director Aswath Marimuthu will play the role of a police officer in a new film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











