தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல்: இளைஞா் கைது

கோவை, சிங்காநல்லூா் அருகே பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 ஜனவரி 2021, 4:41 am IST

கோவை: கோவை, சிங்காநல்லூா் அருகே பாதசாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் அருகே கள்ளிமடையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (22). இவா் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு, போதையில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற கருப்புசாமி (43), ரஞ்சித்குமாா் (31), செல்வராஜ் (44), பழனிசாமி (52) ஆகியோா் மீது கற்களை வீசி தாக்கியுள்ளாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனைத் தேடி வந்தனா். இந்நிலையில், காமாட்சிபுரம் சோதனைச் சாவடி அருகே மணிகண்டனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.