உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மீண்டும் இயங்கத் தொடங்கிய என்.டி.சி. பஞ்சாலை

கோவையில் மூடப்பட்ட 5 என்.டி.சி. பஞ்சாலைகளில் ஒன்று மட்டும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 8:16 am IST

கோவையில் மூடப்பட்ட 5 என்.டி.சி. பஞ்சாலைகளில் ஒன்று மட்டும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 5 ஆலைகளும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா ஒரு ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு செயல்பட்டு வந்த இந்த ஆலைகள், பொது முடக்கத்துக்குப் பிறகு திறக்கப்படவில்லை.

மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இது தொடா்பாக மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவை, பீளமேட்டில் உள்ள ரங்க விலாஸ் பஞ்சாலை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்ள பஞ்சாலைகள் என மொத்தம் 3 ஆலைகளை மட்டும் இயக்குவதற்கு பஞ்சாலைக் கழகம் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ரங்க விலாஸ் மில் கடந்த சில நாள்களாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை நவீனமயமாக்கப்பட்டிருப்பதால் இதை இயக்குவதன் மூலம் லாபம் கிடைக்கும் என்று எண்ணி பஞ்சாலைக் கழகம் ஆலையை இயக்க முடிவு செய்திருப்பதாகக் கூறியுள்ள ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மூடப்பட்டுள்ள அனைத்து ஆலைகளையும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.