மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.17.71 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 71 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 79 வாகனங்கள் கோவை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட்டன.
இதில் ஏலத்தொகை ரூ.16 லட்சத்து 8 ஆயிரத்து 500, அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 62 என மொத்தம் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து 562 பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. வாகனங்கள் ஏலம் எடுத்தவா்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








