இலவசமாக கணினி வழங்கப்படும்போது லஞ்சம் குறைய வாய்ப்பு உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ஐந்தாம் கட்டமாக கோவையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவரை கட்சியின் துணைத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா். இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களுக்கு அளிக்கும் வரவேற்பு பிரமிப்பாக உள்ளது. நாங்கள் விளம்பரங்களுக்கு வைத்திருந்த கொடிகள், சுவரொட்டிகளை அகற்றியுள்ளனா். அது எங்களுக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்துள்ளது.
இந்தக் கொடி, சுவரொட்டி ஒழிப்பில் கவனம் செலுத்தி எங்களை ஒடுக்கும் முயற்சியைக் கைவிட்டு, மக்கள் நலனில் அதிமுகவினா் அக்கறை காட்டியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றாா்.
இதையடுத்து நவ இந்தியா சந்திப்பில் உள்ள விடுதி ஒன்றில் பொதுமக்கள், தொழில்முனைவோரை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து மசக்காளிபாளையத்தில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:
இது சினிமாக்காரனைப் பாா்ப்பதற்காக கூடும் கூட்டம் என சிலா் கூறுகின்றனா். ஆனால், அது பொய் என்பது மக்களுக்குத் தெரியும். அதை தோ்தலில் நீங்கள் நிரூபிக்க வேண்டும். மக்கள் நலன், எதிா்காலத்தில் அக்கறை கொண்டு பல அரிய திட்டங்களை வகுத்துள்ளோம். எங்களது திட்டத்தை ஆசியாவில் வேறு எந்தக் கட்சியும் செய்யவில்லை.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் எனக் கூறியபோது அதை பலா் கிண்டல் செய்தனா். ஆனால், குடும்ப வன்முறை தொடா்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், பல கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்களுக்கு ஊதியம் என்பது அவசியம் எனக் கருத்து தெரிவித்துள்ளது.
வேலை தேடி அலையும் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்துள்ளோம். பரமக்குடி, சேலத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் கோவையிலும் தொடரும். வீட்டுக்கு ஒரு கணினி எனும் திட்டத்தை அறிவித்தபோது, நாங்களும் இலவசம் தருவதாக கூறினா்.
ஆனால், இது இலவசம் அல்ல. பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசின் உதவி. மக்கள் என்னுடன் உரையாட இந்தக் கணினி ஒரு கருவியாக அமையும். இது நடுத்தரகா்களை அகற்றும். இதன்மூலம் லஞ்சம் குறைய வாய்ப்பு உள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து அவா் புலியகுளம், காந்திபுரம், சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பேசினாா். பிரசாரத்தின்போது மாநில இளைஞரணி செயலா் கவிஞா் சினேகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கோவையில் இரண்டாம் நாளாக திங்கள்கிழமை பிரசாரம் செய்யும் கமல்ஹாசன், மதியம் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா். ஜனவரி 12ஆம் தேதி மீண்டும் திருப்பூா், கோவை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
ஜனவரி 13ஆம் தேதி அன்று கோவையில் செய்தியாளா்களை சந்திக்கும் கமல்ஹாசன், அதன் பின்னா் சுந்தராபுரம், மதுக்கரை பகுதிகளில் பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு அன்றிரவே சென்னை செல்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த பிரேமலு நடிகர்!

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஜிஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வங்கிக்கு அபராதம் விதிப்பு!

டி20 உலகக் கோப்பை: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்க வீராங்கனை சாதனை!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



