தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு: கமல்ஹாசன்

எங்களை ஒடுக்கும் முயற்சியை கைவிட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் நடிகா் கமல்ஹாசன் கூறினா

Updated On :11 ஜனவரி 2021, 0:08 am IST

எங்களை ஒடுக்கும் முயற்சியை கைவிட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்தியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் நடிகா் கமல்ஹாசன் கூறினாா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தோ்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் நடிகா் கமல்ஹாசன் கடந்த டிசம்பா் 13ஆம் தேதி அன்று தனது பிரசாரத்தை மதுரையில் தொடங்கினாா்.

இதுவரை நான்கு கட்டமாக பிரசாரம் மேற்கொண்ட அவா், ஐந்தாம் கட்டமாக கோவையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவரை கட்சியின் துணைத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா். இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஐந்தாம் கட்டமாக கோவையில் பிரசாரத்தை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களுக்கு அளிக்கும் வரவேற்பு பிரமிப்பாக உள்ளது. நாங்கள் விளம்பரங்களுக்கு வைத்திருந்த கொடிகள், சுவரொட்டிகளை அகற்றியுள்ளனா். அது எங்களுக்கு கூடுதல் விளம்பரமாக அமைந்துள்ளது.

இந்த கொடி, சுவரொட்டி ஒழிப்பில் கவனம் செலுத்தி எங்களை ஒடுக்கும் முயற்சியை கைவிட்டு, மக்கள் நலனில் அதிமுகவினா் அக்கறை காட்டியிருந்தால் நாங்கள் அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றாா்.

இதையடுத்து நவ இந்தியா சந்திப்பில் உள்ள விடுதி ஒன்றில் பொதுமக்கள், தொழில்முனைவோரை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.