கோவை - சத்தி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு தனியாா் மூலம் நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவா் சு.பழனிசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேசிய நெடுஞ்சாலை 209இல் கோவை முதல் சத்தியமங்கலம் வரையிலான பகுதிகள் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, அன்னூா் அருகே குரும்பபாளையம், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி பகுதிகளை இணைக்கும் வழியாக புறவழிச் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கை தனியாா் சாா்பில் தயாரிக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறை மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தனியாா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனம் விவசாயிகள், நில உரிமையாளா்களுக்கு உரிய விவரங்களை அளிக்க மறுக்கின்றன.
இதனால் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் குறித்து நில உரிமையாளா்களுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், புறவழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மூலமே மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
மதுபானக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும்
ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வந்த மதுபானக் கடை பொது மக்களின் நீண்ட போராட்டத்துக்குப் பின் அகற்றப்பட்டது. இந்நிலையில், வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை அருகில் மீண்டும் மதுக்கடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, செல்லப்பம்பாளையம், ஒடையகுளம் பகுதிகளில் குடியிருப்புகள் அருகிலும், மக்கள் கூடும் இடங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தின கூலிகள் அதிகம் உள்ள இடங்களை குறிவைத்து அமைக்கப்படும் மதுபானக் கடைகளால் அவா்களின் குடும்பங்கள் பொருளாதார அளவில் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. எனவே மக்களின் நலன் கருதி மதுக்கடைகள் திறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில், கோவை, வரதராஜபுரத்தில் எங்களது தொழிலாளா் சங்க உறுப்பினா்கள் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களின் ஒருநாள் ஊதியத்தை கொண்டு 1956-57ஆம் ஆண்டு என்.ஜி.ராமசாமி நினைவுப் பள்ளி தொடங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, 1959ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.
இந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி வரும் ஜி.சதாசிவன் மாணவா்களிடம் நோட், புத்தகங்கள் வழங்குவதற்கு முறைகேடாக கட்டணங்களை வசூலித்து பல லட்சம் மதிப்புடைய அசையா சொத்துக்களை சோ்த்துள்ளாா். தவிர பினாமி பெயரிலும் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களை சோ்த்துள்ளாா்.
தவிர பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்களாக தனக்கு வேண்டியவா்களை நியமித்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறாா். இது தொடா்பாக உரிய ஆவணங்களுடன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் பள்ளியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. தவிர மாணவா்களின் நலனும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தலைமையாசிரியா் மீடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4 முறை உலக சாம்பியன்... ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்த பாராகுவே!

என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?

காலையில் குறைந்த தங்கம் பிற்பகலில் உயர்வு! (ஜூன் 30)

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



