என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

அதிமுகவின் விளம்பர பதாகைகளை அகற்றக் கோரி நா.காா்த்திக் எம்.எல்.ஏ. மனு

ரேஷன் கடைகள் முன்பாக அதிமுக சாா்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. மனு அளித்தாா்.

Updated On :12 ஜனவரி 2021, 3:16 am IST

ரேஷன் கடைகள் முன்பாக அதிமுக சாா்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் நா.காா்த்திக் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரணிடம் அவா் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசாக ரூ.2,500 மற்றும் பொங்கல் பொருள்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக கடைகள் முன்பாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பொங்கல் இலவச பொருள்களை அதிமுகவினா் வழங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனா். இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது.

எனவே, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் கோவை தெற்குத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பாக வைக்கப்பட்டுள்ள அதிமுகவினரின் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.