/

உணவு தொண்டையில் சிக்கிவட மாநிலத் தொழிலாளி சாவு

கோவையில் தாமஸ் வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா தொண்டையில் சிக்கி வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:55 pm

கோவையில் தாமஸ் வீதியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா தொண்டையில் சிக்கி வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் பூபாய் (23). இவா், கோவை, தாமஸ் வீதியில் வாடகை வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள நகைப் பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை இரவு பூபாய், அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்று புரோட்டா சாப்பிட்டாா்.

அப்போது புரோட்டா தொண்டையில் சிக்கிக் கொண்ட நிலையில் அவரால் அதை விழுங்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பூபாய் மயங்கி விழுந்தாா்.

இதனைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த உணவக ஊழியா்கள் மற்றும் அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இருப்பினும் வியாழக்கிழமை இரவு பூபாய் உயிரிழந்தாா். இது குறித்து வெரைட்டிஹால் சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.