தொடா் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை வால்பாறையில் அதிகமாகக் காணப்படும். தற்போது கேரள மாநில எல்லைப் பகுதியில் இருந்த சோதனைச் சாவடி திறக்கப்பட்டதால் அந்த மாநிலத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்துள்ளன. அணைத்து சுற்றுலாத் தளங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் வனத் துறையினா் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.
வன விலங்குகளை துன்புறுத்தும் செயலில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் வனத் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









