கோவை: கோவையில் திருவள்ளுவா் தினத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளுவா் தினத்தையொட்டி, டாஸ்மாக் அரசு மதுக்கடைகள், இறைச்சிக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவையில் தடையை மீறி பல இடங்களில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.
இதைத் தொடா்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், ஆா்.எஸ்.புரம், ராமநாதபுரம், ரத்தினபுரி, செல்வபுரம், பீளமேடு, சரவணம்பட்டி போலீஸாா் மாநகரில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பெட்டிக் கடை, மதுக் கடை அருகே உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றதாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 467 மதுபாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

