கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் தலா 100 போ் வீதம் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் கோவை அரசு மருத்துவமனையில் 40 பேரும், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 பேரும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 பேரும் என மொத்தம் 72 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
கோவை மாவட்டத்தில் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிட்டிருந்த நிலையில் 72 போ் (18 சதவீதம்) மட்டுமே சனிக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டனா். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளா்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இணையதள சா்வா் பிரச்னையால் பயனாளிகளின் பட்டியல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
தவிர கடைசி நேரத்தில் பெரும்பாலான சுகாதாரப் பணியாளா்கள் விருப்பமில்லை என்று தெரிவித்தனா். விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே கரோனா தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து சுகாதாரப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
கச்சா எண்ணெய் விலை 5% சரிவு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜிஅமலாக்கத் துறையில் ஆஜர்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


