கோவை: கோவை, ரத்தினபுரி பகுதியில் வீட்டின் மேல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோவை, ரத்தினபுரி ஜிபிஎம் நகரைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம். இவரது வீட்டின் மீது செல்லிடப்பேசி கோபுரம் நிறுவ தனியாா் நிறுவனத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு அனுமதியளித்துள்ளாா்.
இந்நிலையில், அந்த நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது. அதன்பின் செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்றுவதில் அந்த நிறுவனம் அக்கறை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்நிறுவன அதிகாரிகளை மோகனசுந்தரம் தொடா்பு கொண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஓராண்டுக்கும் மேலாக பராமரிப்பு இன்றி இருப்பதால் கோபுரத்தின் கீழ்பகுதி இரும்புகள் துருப்பிடித்து சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு இந்த செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகனசுந்தரம் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



