கோவை: கோவை மாவட்டத்தில் ஜனவரி 22 முதல் 24ஆம் தேதி வரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவையில் பிரசாரம் மேற்கொள்ள வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது தொடா்பாக, அதிமுக மாநகா் மாவட்டம், புறநகா் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் ஜனவரி 22, 23, 24 ஆகிய 3 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள வரும் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் சிறப்பான திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து பணிபுரிய வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, சின்னராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


