மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கவிதை நூல் வெளியீட்டு விழா

விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடி கிராமத்தில் "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மே 2013, 12:13 pm IST

விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடி கிராமத்தில் "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கவிஞர் ரா.தீபன்குமார் எழுதிய "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.கவிதை நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட முனைவர் இரத்தின.புகழேந்தி, திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விழாவில், கவிஞர் செ.அமிர்தராசு வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் தலைமை ஏற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் மு.வள்ளியம்மை முன்னிலை வகித்தார்.திராவிடர் கழகப் பேச்சாளர் முத்து.கதிரவன், கவிஞர் கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்டப் பொருளர் மாய.முனுசாமி, ஜெகதீஸ்வரன், பிச்சைமொஷிதீன், கவிராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் ரா.தீபன்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.