பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
÷மேலும் இச்சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
÷பண்ருட்டி காவல் சரகத்தில் பண்ருட்டி, காடாம்புலியூர், புதுப்பேட்டை, முத்தாண்டிக்குப்பம், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் ஆகியப் பகுதிகளில் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன.
÷இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் பண்ருட்டி நகரப் பகுதியில் சுமார் 6, 7 கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
÷இச்சம்பவங்கள் நிகழ்ந்த அனைத்து இடங்களும் பகல், இரவு நேரங்களில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.
÷இதுமட்டுமின்றி பண்ருட்டியில் வழிப்பறிச் சம்பவங்களும் சகஜமாகி விட்டது.
போலீஸார் திணறல்:
÷இந்த தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களால் பண்ருட்டி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
÷இதனால் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பண்ருட்டி பகுதிகளில் இரவு நேர ரோந்தைப் போலீஸார் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு... தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்டம் அறிவிப்பு!

கல்வியில் சிறந்து விளங்க! தீர்வுகளும் பரிகாரங்களும்!!

தொடர்ந்து 2வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை!!




