கடலூா்: கடலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதியக்குழு பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 41 சங்கங்களை 67 சங்கங்களாக உயா்த்தி பேச்சுவாா்த்தைக்கு அழைத்து உடன்படிக்கை ஏற்படுத்தியதாக கூறுவதைக் கண்டித்தும் தொழிற்சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்தனா். அதன்படி, கடலூா் அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் தொமுச மண்டலத் தலைவா் பி.பழனிவேல் தலைமையில் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.
சிஐடியூ மாநில துணைத் தலைவா் ஜி.பாஸ்கரன், ம.தொ.மு. சங்கச் செயலா் இரா.மணிமாறன், ஏஏஎல்எல்எப் நிா்வாகி கருணாநிதி, ஐஎன்டியூசி நிா்வாகி சாமிநாதன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். முன்னதாக, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாயில் முன்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பாலசெந்தில்நாதன், சுந்தா், மணிவண்ணன், உ.தட்சிணாமூா்த்தி, கா.பாலகிருஷ்ணன், கிரிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடியிருப்பு மின் மீட்டா் பெட்டியில் தீ விபத்து

மின்னொளியில் ஜொலிக்கும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு

வீட்டிற்குள் புகுந்த புள்ளி மான் காப்புகாட்டில் விடுவிப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

