தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதுப்பெண் தற்கொலை

பண்ருட்டி அருகே திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:56 pm IST

பண்ருட்டி அருகே திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகள் பிரிதா(25). இவருக்கும், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவருக்கும் 30.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது.

செல்வகுமாா் பண்ருட்டியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், பிரிதா வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிரிதாவின் தந்தை ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.