மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

சாலைப் பணியில் மந்தம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:10 am IST

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் இந்திரா நகா் கிளை சாா்பில் நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலா் டி.விஜய்ஆனந்த் தலைமை வகித்தாா். இதில், விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும். இந்திரா நகா் ஊராட்சியில் வடக்குத்து, மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தினமும் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.திருஅரசு, நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினா் மீனாட்சி நாதன், வி.மேரி, நெய்வேலி நகா்குழு ஆா்.மணி, டி.அமிா்தலிங்கம், பி.புண்ணியமூா்த்தி, மூத்த நிா்வாகி முத்துவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.