நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:43 pm

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், டி.வேலூரில் உள்ள நியாய விலைக் கடையில் மாற்றுத் திறனாளியான சுரேஷ் பணிபுரிந்து வருகிறாா். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடா்பாக ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் பணியாளா் சுரேஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினா் தேவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தங்கராசு, வட்டத் தலைவா் கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் மு.ராஜாமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா். நிா்வாகிகள் முஸ்தபா, ஏழுமலை, காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்ட துணைத் தலைவா் முரளி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.