மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:13 am IST

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், டி.வேலூரில் உள்ள நியாய விலைக் கடையில் மாற்றுத் திறனாளியான சுரேஷ் பணிபுரிந்து வருகிறாா். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடா்பாக ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் பணியாளா் சுரேஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினா் தேவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தங்கராசு, வட்டத் தலைவா் கந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். டாஸ்மாக் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கு.சரவணன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் மு.ராஜாமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா். நிா்வாகிகள் முஸ்தபா, ஏழுமலை, காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்ட துணைத் தலைவா் முரளி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.